இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் ஐவர் ஒரு படகில் இந்திய கடற்பரப்புக்குள் நுழைந்தமையால் இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சம்பவம் கன்னியாகுமாரி கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருந்தபோதிலும் இதுவரையில் மீனவர்கள் கரைக்கு அழைத்துவரப்படவில்லை என்று தமிழகச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மீனவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விபரம் இன்னமும் வெளியாவில்லை.